உள்ளூர் செய்திகள் (District)
கந்தர்வகோட்டையில் ஆருத்ரா தரிசன விழா
- கந்தர்வகோட்டையில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது
- விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருள்மிகு அமராவதி உடனுறை ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.