உள்ளூர் செய்திகள் (District)

கால்நடை மருத்துவ முகாம்

Published On 2023-01-23 05:55 GMT   |   Update On 2023-01-23 05:55 GMT
  • கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
  • 500க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

புதுக்கோட்டை:

கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சி சொக்கம்பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை குறித்த விழிப்புணர்வு மற்றும் சுகாதார ஆலோசனைமுகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கம் விடுதி பெருமாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சாந்தி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளுக்கு வேலா டி பட்டி கால்நடை தலைமை மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் மருத்துவர்கள் கவின் குமார், செந்தில் ராஜன், கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் சிகிச்சை அளித்தன ர் முகாமில் கால்நடைகளுக்கு அம்மை தடுப்பூசி குடற்புழு நீக்கம், கழிச்சல் தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து கால்நடைகளுக்கும் தாது உப்பு கரைசல் வழங்கப்பட்டது.முகாமில் சிறந்த கிடாரிக்கன்றுகளுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.முகாமில் 500க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி செயல் காளிமுத்து செய்திருந்தார்.


Tags:    

Similar News