உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணப்பரிசுடன் சான்றிதழ்

Published On 2023-05-20 06:10 GMT   |   Update On 2023-05-20 06:10 GMT
  • சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை பாராட்டி வழங்கப்பட்டது
  • புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 'சிறப்பாக பணியாற்றிய நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருமயம் , ஆர்.ஆர்.சமுத்திரம் விற்பனையாளர் தனபாலுக்கு முதல் பரிசாக 4 ஆயிரம் ரூபாயும், ஆலங்குடி, சிக்கப்பட்டி விற்பனையாளர் அமுதாவிற்க்கு இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாய், திருமயம் கூட்டுறவு விற்பனை சங்கம், ரேஷன் கடை எடையாளர் ராமாயிக்கு முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், மீமிசல் அமுதம் அங்காடி எடையாளர் கண்ணகிக்கு இரண்டாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், பாராட்டு சான்றிதழோடு கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், துணைப் பதிவாளர் சதீஸ்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News