உள்ளூர் செய்திகள் (District)

ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

Published On 2022-08-17 08:56 GMT   |   Update On 2022-08-17 08:56 GMT
  • ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்தார்
  • பரோலில் வெளியே வந்தவர்

புதுக்கோட்டை:

பொன்னமராவதி பெரியார்நகர் ராசு மகன் சரவணன்(வயது 40). இரட்டை ஆயுள் தண்டனை கைதியான இவர், பரோலில் வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது நண்பருடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அன்று இரவு வயிற்றுவலி ஏற்பட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பரோலில் வந்த கைதி உயிரிழந்த விவகாரம் பொன்னமராவதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

Tags:    

Similar News