ஆலங்குடியில் அரசு பள்ளிகளுக்கு டெஸ்க்- பெஞ்ச் வழங்கும் விழா
- ஆலங்குடியில் அரசு பள்ளிகளுக்கு டெஸ்க்- பெஞ்ச் வழங்கும் விழா நடைபெற்றது
- இதன் மூலம் 350 பள்ளி மாணவ, மாணவிகள் பாடம் படிப்பதற்கு உதவியாக இருக்கும்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகளுக்கு டெஸ்க் பெஞ்ச் வழங்கும் விழா மாஞ்சன்விடுதி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாஞ்சன்விடுதி ஊராட்சி ஒன்றியம் சன்விடுதியில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு 16, மழவராயன்பட்டி ஆரம்ப பள்ளிக்கு 16, வம்பன் பள்ளிக்கு 5, கொத்தக்கோட்டை ஊராட்சியில் தோப்புக்கொல்லை 11, கல்யாணிபுரம் 16 என மொத்தம் 64 டெஸ்க்பெஞ்ச் வழங்கப்பட்டது.
இதன் மூலம் 350 பள்ளி மாணவ மாணவிகள் பாடம் படிப்பதற்கு உதவியாக இருக்கும்.டெஸ்க் பெஞ்சுகளை மாவட்ட கவுன்சிலர் உஷா செல்வம் வழங்கினார். மழவராயன்பட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அயூப்கான், மாஞ்சன்விடுதி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்கண்ணன், பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பராணி, உதவி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, ஆரோக்கியசாமி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், மாவட்ட ஒன்றிய பேரூர் நகர கிளை தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.