உள்ளூர் செய்திகள்
- புதுக்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சத்துணவு திட்டத்தில் காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை கண்டித்து புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியா்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் அன்பு தலைமை தாங்கினார். இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.