உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான கபடி போட்டி

Published On 2023-04-03 07:48 GMT   |   Update On 2023-04-03 07:48 GMT
  • கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்றது
  • முதல் பரிசை தட்டி சென்ற காவல்துறையினர்

கந்தர்வகோட்டை, 

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கந்தர்வகோட்டை வடக்கு தி.மு.க. கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியை புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் கே. கே. செல்ல பாண்டியன் தொடங்கி வைத்தார். அரை இறுதி ஆட்டத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார். முதல் பரிசை தமிழ் நாடு காவல் துறை அணியும் , இரண்டாவது பரிசை கோமாபுரம் அணியினரும் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் மாவட்ட கழகச் செயலாளர் கே.கே. செல்லபாண்டியன், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விராலிமலை சந்திரசேகரன், தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பரமசிவம், நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மா. தமிழ் அய்யா செய்திருந்தார்..

Tags:    

Similar News