உள்ளூர் செய்திகள்

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2023-03-27 08:15 GMT   |   Update On 2023-03-27 08:15 GMT
  • காதல் திருமணம் ெசய்தவர்களை இரு தரப்பு பெற்றோர்கள் உதறினர்
  • அறிவுரை சொல்லி அனுப்பி வைத்த போலீசார்

ஆலங்குடி.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் தர்மர் கோவில் சேர்ந்த ராஜேந்திரன் மகன் குமாரவேல் (வயது 33). கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார்.இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அண்ணா நகர் பகுதியில் வேலை பார்த்தபோது, அருகில் இருந்த பட்டபிரான் தெருவை சேர்ந்த மகிமைதாஸ் மகள் பிரித்தி (வயது 21) என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கீரமங்கலம் சிவன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தங்களது பெற்றோர்களால் ஆபத்து வரும் என்று உணர்ந்த அவர்கள், பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் கா வல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவகி, பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்களுக்கு அவர்கள் தேவையில்லை என்று இரு வீட்டாரும் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றனர். பின்னர் போலீசார் திருமணம் செய்த காதல் ஜோடிக்கு அறிவுரைகள் கூறி அனுப்பிவைத்தனர்.

Tags:    

Similar News