உள்ளூர் செய்திகள் (District)
மின்சார கம்பியில் அடிப்பட்டு மயில் சாவு
- மின்சார கம்பியில் அடிப்பட்டு மயில் இறந்தது
- வனத்துறையினர் மரியாதை செலுத்தி புதைத்தனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே செம்பட்டி விடுதி பஸ் நிறுத்தம் அருகில் உயர் மின்னழுத்த கம்பியில் அடிபட்டு ஆண் மயில் உயிரிழந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் செம்பட்டிவிடுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து இறந்த மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் மயிலுக்கு உரிய மரியாதை செலுத்தி அப்பகுதியில் புதைத்தனர்.