உள்ளூர் செய்திகள் (District)

சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2023-01-31 08:33 GMT   |   Update On 2023-01-31 08:33 GMT
  • காரையூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது
  • இரத்த அழுத்தம், உயரம், எடை, வெப்பத்தின் அளவு பரிசோதனைகள் நடைபெற்றது

புதுக்கோட்டை,

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.எச்.சலீம் வழிகாட்டுதலின்படி டீம் மருத்துவமனை சார்பாக புதுக்கோட்டை, காரையூர் ஊராட்சி சமுதாய கூடத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் முகமது இக்பால் மற்றும் துணைத்தலைவர் அடைக்கன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இக்காலக் கட்டத்தில் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும், கை, கால்களை சுத்தமாக அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், சத்துநிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும், அதிக எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் கட்டாயம் அணியவும், போதுமான அளவு சமூக இடைவெளி விடவும் மற்றும் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழலாம் என்று மருத்துவர் விளக்கி கூறினார்.டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் அறிவரசு அனைவருக்கும் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார். இரத்த அழுத்தம், உயரம், எடை, வெப்பத்தின் அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதுபாலன் செய்திருந்தனர். முடிவில் காப்பீடு திட்ட ஒருங்கினைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags:    

Similar News