உள்ளூர் செய்திகள் (District)

நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் பலி

Published On 2023-04-02 06:50 GMT   |   Update On 2023-04-02 06:50 GMT
  • புதுக்கோட்டை அன்னவாசல் அருகே பரிதாபம்
  • உடல்கூறு ஆய்விற்கு பிறகு செத்த மானை, வனத்துறையினர் புதைத்தனர்

விராலிமலை,

அன்னவாசல் அருகே 1500-ஏக்கர் பரபப்பளவில் அரசுக்கு சொந்தமான அண்ணாபண்ணை உள்ளது. இங்கு அதிக அளவில் மான்கள் உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் அங்கிருக்கும் மான்கள் தண்ணீர் தேடி காட்டை விட்டு வெளியேறும் போது வாகனங்களில் அடிபட்டும் நாய்களிடம் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வயலோகம் அருகே உள்ள குறும்பக்குளம் பகுதியில் மான் ஒன்று சுற்றி திரிந்தது. இதைபார்த்த நாய்கள் துரத்தி சென்று அந்த புள்ளிமானை கடித்து குதறியது. இதில் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை, வருவாய்த்துறை, கால்நடைத்துறை அலுவலர்கள் புள்ளிமானை உடற்கூறு ஆய்வு செய்து அப்பகுதியில் புதைத்தனர்.

Tags:    

Similar News