உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2023-02-27 09:20 GMT   |   Update On 2023-02-27 09:20 GMT
  • ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
  • போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து சமரசம் பேசினர்.

ஆலங்குடி

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா சொர்ணக்காடு பணஞ் சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுகுமாரன் மகள் தீபிகா (வயது 22) இவர் கணித பட்டதாரி.அதே பகுதியை சேர்ந்த வளப்பிரமன்காடு மாசிலாமணி மகன் விவேக் (வயது 27). இவர்கள் இருவரும் கல்லூரி படிக்கும் போது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம செய்து கொண்டனர். இதையடுத்து இவருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து சமரசம் பேசினர். பின்னர்காதல் ஜோடியிடம் கையெழுத்து பெற்றக் கொண்டு அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.


Tags:    

Similar News