- தாட்கோ திட்ட விழிப்புணர்வு முகாமில் இளைஞர்களுக்கு மானிய உதவித்தொகை வழங்கப்பட்டது
- ரூ.3.90 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, தென்னலூர் கிராமத்தில், தாட்கோ திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு முகாம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.இம்முகாமில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநரால் தாட்கோ திட்டங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது.இந்த விழிப்புணர்வு முகாமில் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ், சுற்றுலா வாகனம் வாங்குவதற்கு திட்டத்தொகை ரூ.10,79,088ல் தாட்கோ மானியம் ரூ.2,25,000 மற்றும் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பால்மாடு வாங்குவதற்கு திட்டத்தொகை ரூ.5,50,000ல் தாட்கோ மானியம் ரூ.1,65,000 வழங்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.இம்முகாமில், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) முத்துரெத்தினம், தனி வட்டாட்சியர் ஜமுனா, வட்டாட்சியர் வெள்ளைசாமி மற்றும் அலுவலர்கள், தென்னலூர் பழனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.