உள்ளூர் செய்திகள்

மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம்

Published On 2023-04-11 07:54 GMT   |   Update On 2023-04-11 07:54 GMT
  • வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது
  • வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், வெள்ளி நாணயம் பரிசு

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 65 ஆம் ஆண்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. மாஞ்சான்விடுதி மற்றும் கொத்தகோட்டை ஊராட்சி பொதுமக்களால் நடத்தப்படும் இப்பந்தயத்தில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, தேன் சிட்டு, சிறிய குதிரை, பெரிய குதிரை, புதுப்பூட்டு குதிரை, ஒற்றை மாடு, நடு மாடு, பூஞ்சிட்டு மாடு என்று ஒன்பது வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை பரிசுகள் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தை வம்பன் முதல் திருவரங்குளம் வரை சாலை இரு பகுதிகளிலும் பொதுமக்கள் நின்று கண்டு களித்தனர்.

Tags:    

Similar News