உள்ளூர் செய்திகள்

தேனிமலையில் ஜல்லிகட்டு

Published On 2023-04-06 07:49 GMT   |   Update On 2023-04-06 07:49 GMT
  • வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகள்
  • பங்குனி உத்திர திருவிழாவை முனனிட்டு நடைபெற்றது

புதுக்கோட்டை, 

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலையில் ஜல்லிகட்டு நடைபெற்றது.  நான்கு ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான காளைகள் கலந்து கொள்ள வைக்கப்பட்டன.   வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்குவதற்கு மாடுபிடி வீரர்கள் தங்களது துணிச்சலை காட்டினர். ஜல்லிகட்டு முன்னிட்டு அப்பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

Tags:    

Similar News