உள்ளூர் செய்திகள்

ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

புரட்டாசி 3-ம் சனிக்கிழமை; ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2022-10-09 09:54 GMT   |   Update On 2022-10-09 09:54 GMT
  • ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
  • நல்ல மழைபொழிந்து விவசாயம் செழிக்க சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்யப்பட்டது.

திருவையாறு:

திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளால் வழிபாடு செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் நேற்று புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. உற்சவருக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டது. மேலும் 'பக்தர்களின் குடும்ப நலன்கள், தேச நலன், நல்ல மழைபொழிந்து விவசாயம் செழிக்கவும், உலகநாடுகளிடையே ஒற்றுமை, அமைதி நிலவவும் வேண்டி சங்கல்பம் செய்து சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

இவ் வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வணங்கினர். ஏற்பாடுகளை திருவையாறு பாவாசாமி அக்ரஹாரம் ஸ்ரீஆஞ்சநேயர் கோவில் பரம்பரை அறங்காவலர் குருமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தார்கள்.

Tags:    

Similar News