உள்ளூர் செய்திகள்

பொருட்காட்சி நகரசபை தலைவர் திறப்பு

Published On 2023-05-01 08:27 GMT   |   Update On 2023-05-01 08:27 GMT
  • ராமநாதபுரத்தில் பொருட்காட்சியை நகரசபை தலைவர் திறந்து வைத்தார்.
  • ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெய்ன்மெண்ட் உரிமையாளர் எம்.கே.உதய குமார் செய்திருந்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் கேணிக்கரை நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெய்ன்மெண்ட் நடத்தும் மாபெரும் பொன்னியின் செல்வன் பொருட்காட்சி நேற்று முதல் தொடங்கி 35 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடை பெறும்.

இதில் பொன்னியின் செல்வன் அரண்மனை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள் கூடிய செல்பி பாயிண்ட் இடம்பெற்றுள்ளது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கொண்டாடி மகிழ வித விதமான ராட்டினங்கள், ஜெயன்ட் வீல் ராட்டினம், கொலம்பஸ் ராட்டினம், டிஸ்கோராட்டினம், ஹெலிகாப்டர் ராட்டினம், டிராகன் ராட்டினம்,ஜம்பிங் பலூன், யானை கார், பைக், படகு சவாரி, 3-டி ஷோ திகிலூட்டும் பேய் வீடு, போன்ற எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

சாப்பிட்டு மகிழ வித, விதமான உணவு வகைகள் மற்றும் வீட்டிற்கு தேவை யான பொருட்கள், குழந்தை களுக்கு தேவையான பொம்மை வகைகள், பெண்களுக்கு தேவையான பேன்சி பொருட்கள் விற்பனையாகிறது.

பொருட்காட்சியை ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமை தாங்கி திறந்து வைத்தார். நகரசபை துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் டி.ஆர்.செல்வராணி விஸ்வநாதன் குத்து விளக்கு ஏற்றினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெய்ன்மெண்ட் உரிமையாளர் எம்.கே.உதய குமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News