உள்ளூர் செய்திகள் (District)

தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்.

காலம் தாழ்த்தி சம்பளம் வழங்குவதை கண்டித்து நூதன போராட்டம்

Published On 2023-10-20 09:37 GMT   |   Update On 2023-10-20 09:37 GMT
  • தூய்மை பணியாளர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்
  • பணிக்கு வந்த நிரந்தர ஊழியர்களிடம் பிச்சை கேட்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அருகே மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இங்கு உள்ள குடியிருப்பு பகுதிகளில் தூய்மை செய்யும் பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டு ஒப்பந்த முறையில் 34 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் 2-ந் தேதி வழங்க வேண்டிய சம்பளத்தை முறையாக வழங்காமல் காலம் தாழ்த்தி வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே தங்களுக்கு குறித்த தேதியில் முறையாக சம்பளம் வழங்க வேண்டுமென கூறி நேற்று பெல் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பணிக்கு வந்த நிரந்தர ஊழியர்களிடம் பிச்சை எடுத்து நூதன போராட்டத்திலும் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News