உள்ளூர் செய்திகள் (District)

மாம்பாக்கம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-08-22 10:02 GMT   |   Update On 2022-08-22 10:02 GMT
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படுகிறது
  • செயற்பொறியாளர் தகவல்

ஆற்காடு:

ஆற்காடு கோட்டத்தைச் சார்ந்த மாம்பாக்கம் துணைமின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆருர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News