உள்ளூர் செய்திகள்

பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மனநலம் பாதித்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்ப்பு

Published On 2022-08-31 08:02 GMT   |   Update On 2022-08-31 08:02 GMT
  • முதியவரை மீட்ட நம்பிக்கை மனநல காப்பகத்தினர் சிகிச்சைக்காகவும், தகுந்த பாதுகாப்பிற்காகவும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
  • காப்பக பணியாளர்கள், ஓ.எஸ்.சி பணியாளர்களை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி, நகர பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இந்திரா (65) மற்றும் மற்றும் மராட்டி மொழி பேசும் சுமார் 62 வயது மதிக்கத்தக்க முதியவரை மீட்ட நம்பிக்கை மனநலக் காப்பகத்தினர் சிகிச்சைக்காகவும், தகுந்த பாதுகாப்பிற்காகவும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு உதவிய நம்பிக்கை மனநல காப்பக நிறுவனர் சவுந்தர்ராஜன் மற்றும் திட்ட மேலாளர் விஜயா அதற்கு உறுதுணையாக இருந்த இன்ஸ்பெக்டர் கழனியப்பன், திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அகிலன், உடனடி முன்னாள் தலைவர் காளிதாஸ், முன்னாள் செயலாளர் மதன், உறுப்பினர் குமார் மற்றும் நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள், ஓ.எஸ்.சி பணியாளர்களை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

Tags:    

Similar News