உள்ளூர் செய்திகள்

விபத்தில் காயம் அடைந்த தாய்-மகனுக்கு ரூ.3.47 லட்சம் இழப்பீடு

Published On 2023-03-02 09:50 GMT   |   Update On 2023-03-02 09:50 GMT
  • சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 2019-ல் அய்யந்திருமாளிகை அருகே ஆட்டோ ஓட்டிச் சென்றபோது திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற நதியா என்பவர் மீது மோதியது.
  • அதில், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 3.47 லட்சம் ரூபாய் இழப்பீடு ஆட்டோ டிரைவர் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்

சேலம்:

சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 27). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 2019-ல் அய்யந்திருமாளிகை அருகே ஆட்டோ ஓட்டிச் சென்றபோது திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற நதியா என்பவர் மீது மோதியது.

இதில் நதியா மற்றும் இவரது மகன் விக்ராந்த் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இழப்பீடு கேட்டு நதியா சேலம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஆட்டோ டிரைவர் வைத்திருந்த இன்ஸ்சூரன்ஸ் ஆவணங்கள் போலியானது என சம்பந்தப்பட்ட நிறுவனம் போலீசில் புகார் அளித்திருந்தது.

இதையடுத்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 3.47 லட்சம் ரூபாய் இழப்பீடு ஆட்டோ டிரைவர் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்

Tags:    

Similar News