உள்ளூர் செய்திகள்

அம்மன் சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்ததையும், பவுர்ணமி சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

Published On 2023-07-04 07:24 GMT   |   Update On 2023-07-04 07:24 GMT
  • சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் நேற்றிரவு பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
  • இதில் திரவுபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரமும் நடைபெற்றது.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் நேற்றிரவு பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரவுபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரமும் நடைபெற்றது. சந்தன அலங்காரத்தில் திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தருமராஜர் உள்ளிட்ட பஞ்சபாண்டவர்கள், கிருஷ்ணபகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News