உள்ளூர் செய்திகள் (District)

ஆடித்திருவிழாவையொட்டி சேலத்தில் பூக்கள் விற்பனை அதிகரிப்பு

Published On 2022-08-08 10:02 GMT   |   Update On 2022-08-08 10:02 GMT
  • ஆடித்திருவிழாவையொட்டி சேலம் வ .உ .சி . மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து அதிகரித்து உள்ளது. அதன் காரணமாக விற்பனையும் விறுவிறுப்பாக அதிகரித்துள்ளது.
  • தற்போது கிலோவுக்கு ரூ.700 குறைந்து தற்சமயம் ரூ.500 என விற்கப்பட்டு வருகிறது.

அன்னதானப்பட்டி:

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதனால் ஆடி மாதத்தில் சேலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் திருவிழா களை கட்டும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சேலம் கோட்டை மாரியம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி கோவிலில் அம்மனுக்கு பூஜை செய்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளால் சேலம் வ .உ .சி . மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து அதிகரித்து உள்ளது. அதன் காரணமாக விற்பனையும் விறுவிறுப்பாக அதிகரித்துள்ளது .

கடந்த சில நாட்களாக 1 கிலோ மல்லிகை பூ ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்தது. தற்போது கிலோவுக்கு ரூ.700 குறைந்து தற்சமயம் ரூ.500 என விற்கப்பட்டு வருகிறது.

சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில்)

வருமாறு :

மல்லிகை பூ ரூ.500, முல்லை ரூ.360, ஜாதி மல்லி ரூ.240, காக்கட்டான் ரூ.360, கலர் காக்கட்டான் ரூ.320, சி.நந்தியா வட்டம் ரூ. 160, சம்மங்கி ரூ.130, சாதா சம்மங்கி ரூ.130, அரளி ரூ.160, வெள்ளை அரளி ரூ.160, மஞ்சள் அரளி ரூ.160, செவ்வரளி ரூ.180, ஐ.செவ்வரளி ரூ.180, நந்தியா வட்டம் ரூ.160.

பூக்க்கள் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடி மாதம் திருவிழா மாதம், அதனைத் தொடர்ந்து ஆவணி மாத முகூர்த்த தினங்கள் வருவதால் பூக்களின் வரத்து அதிகரித்து விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News