உள்ளூர் செய்திகள்

பால்குட ஊர்வலம் நடந்தது.

முத்துமாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்

Published On 2023-04-13 08:29 GMT   |   Update On 2023-04-13 08:29 GMT
  • முத்துமாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடந்தது.
  • தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சாரதா நகரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி நவசக்தி ஹோமம், கணபதி ஹோமம், அம்மனுக்கு காப்பு கட்டு, சக்தி கரகம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

அம்மனுக்கு தாயமங்கலம் முத்துமாரியம்மன் அலங்காரமும், அதன் பின்னர் மீனாட்சி அம்மன், காமாட்சி அம்மன், மகாலட்சுமி அம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன், ஐஸ்வர்ய லெட்சுமி அம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன், கனகதுர்க்கை, மூகாம்பிகை உள்ளிட்ட அலங்காரம் செய்து தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

இதைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை, பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மன் கோவில் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

இன்று காலை சிலம்பணி விநாயகர் கோவிலில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், வேல் குத்தி திருப்பத்தூர் சாலை, மின்சாரம் வாரிய அலுவலகம் வழியாக கோவில் சென்றடைந்தனர்.  

Tags:    

Similar News