உள்ளூர் செய்திகள்
- சிவகங்கையில் குளியல் தொட்டியை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி கட்டப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சி 11-வது வார்டு மன்னர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. அதை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், ஆணையாளர் (பொறுப்பு) பாண்டிசுவரி, கவுன்சிலர்கள் ராஜா, ஆயுப்கான், மகேஷ், ராபர்ட், தாமு, கார்த்திகேயன், ராமதாஸ், கிருஷ்ணகுமார், ஒப்பந்ததாரர் முருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அருள்ஸ்டிபன், அவைத் தலைவர் பாண்டி, நகரதுணைசெயலாளர் மோகன்,சேதுபதி, சரவணன், முருகன்,சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.