உள்ளூர் செய்திகள் (District)

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

Published On 2023-06-22 08:42 GMT   |   Update On 2023-06-22 08:42 GMT
  • பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
  • அதில் பெறப்பட்ட சில மனுக்களுக்கு உடனடி தீர்வும் காணப்பட்டது.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமை தாங்கினார்.

முகாமில் நாச்சியாபுரம், திருப்பத்தூர், கண்டவராயன்பட்டி ஆகிய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. அதில் பெறப்பட்ட சில மனுக்களுக்கு உடனடி தீர்வும் காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராஜ், செல்வபிரபு, சாமுண்டீஸ்வரி, சிவாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News