உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடா்பு முகாம்

Published On 2022-10-11 07:48 GMT   |   Update On 2022-10-11 07:48 GMT
  • திருப்புவனம் அருகே, நாளை மக்கள் தொடா்பு முகாம் நடக்கிறது.
  • சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொிவித்துள்ளார்..

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கொந்தகை உள்வட்டம், பொட்டபாளையம் கிராம பஞ்சாயத்து அலுவலக அருகில் நாளை (12-ந் தேதி) காலை 10 மணியளவில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் அரசுத்துறை அலுவலா்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்்ந்த முதன்மை அலுவலா்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே நோக்கம் ஆகும்.

பொட்டபாளையம் கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் இந்த மக்கள் தொடா்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு, பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொிவித்துள்ளார்.

Tags:    

Similar News