- சமரச நாள் விழிப்புணர்வு பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா தொடங்கி வைத்தார்.
- மையத்தில் வைக்கப்படும் பிரச்சினைகள் குறித்த ரகசியம் காக்கப்படும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழிப்புணர்வு பேரணி தொடக்க விழா நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி ஆ.சுமதி சாய் பிரியா தலைமை தாங்கி பேரணியை தொடங்கிவைத்தார்.
அவர் பேசும் போது, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ந் தேதி சமரச நாள் கடைப்பிடிக்கப்படு கிறது. சமரச மையத்தில் வரக்கூடிய பிரச்சினைக்கு இருதரப்பினரையும் வைத்து சுமூகமாக பேசி தீர்வு காணப்படும். இந்த மையத் தில் வைக்கப்படும் பிரச் சினைகள் குறித்த ரகசியம் காக்கப்படும். பிரச்சினை களுக்கு அவசரம் காட்டாமல் இரு தரப்பினர் சம்மதத்து டன் அமைதியாக தீர்வு காணப்படும். தீர்வு உங்கள் கையில் என்றார்.
பேரணியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச் சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதிகள் பரமேஸ்வரி, சுந்தரராஜ், மாவட்ட உரிமை யியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின் பேகம், குற்றவியல் நீதிதுறை நடுவர்கள் அனிதா கிரிஸ்டி, சத்திய நாராய ணன் மற்றும் சமரசர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்காடிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.