உள்ளூர் செய்திகள்
- சித்த மருத்துவ முகாம் நடந்தது.
- இதில் 230 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி ஒன்றியம் காப்பரப்பட்டி சமுதாயக்கூடத்தில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செம்மலர் சந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு, ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெயசுந்தரி சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
முகாமில் சித்த மருந்து வழங்குதல், வர்ம சிகிச்சை, மூலிகை கண்காட்சி, சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு, யோகா பயிற்சி, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, கண் பரிசோதனை ஆகியவை பொதுமக்களுக்கு செய்யப்பட்டது. இதில் 230 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.