உள்ளூர் செய்திகள்

மலைப்பாம்பு பிடிபட்டது

Published On 2022-10-03 07:39 GMT   |   Update On 2022-10-03 07:39 GMT
  • நெற்குப்பையில் மலைப்பாம்பு பிடிபட்டது
  • தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள 5-வது வார்டில் பொன்னமராவதி- திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள சாத்தப்பா செட்டியார் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை 10 அடி நீளம் கொண்ட வெங்கனத்தி வகையைச் சேர்ந்த மலை பாம்பு ஒன்று வீட்டின் பின்புறம் இரை தேடி வந்தது.

இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் தீயணைப்பு துறையினர் உடனடியாக வரவில்லை. இதைத்தொடர்ந்து நெற்குப்பை பேரூராட்சி 5-வது வார்டு உறுப்பினர் சேர்க்கப்பன் தூய்மை பணியாளர்களை அழைத்தார். அதன்பேரில் வந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு தலைமையிலான தூய்மைப்பணியாளர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வேலங்குடி வனப் பகுதியில் விட்டனர்.

Tags:    

Similar News