உள்ளூர் செய்திகள் (District)

தக்கலை அருகே ராணுவ வீரரின் தந்தை பள்ளத்தில் விழுந்து சாவு

Published On 2022-08-30 07:36 GMT   |   Update On 2022-08-30 07:36 GMT
  • காலை மணி சதாசிவம் மூலிகை பறிக்க முளகுமூடு அருகே உள்ள ஆள்காட்டி குளத்தின் கரையில் சென்ற போது நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தார்
  • தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி :

தக்கலை அருகே உள்ள கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் மணி சதாசிவம் (வயது80). இவரது மகன் குமார், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். நேற்று காலை மணி சதாசிவம் மூலிகை பறிக்க முளகுமூடு அருகே உள்ள ஆள்காட்டி குளத்தின் கரையில் சென்ற போது நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தார். இதனைக் கண்டவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணி சதாசிவம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் குமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News