- பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
- தொலைபேசி எண், முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமந்தமலை ஊராட்சியில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக ்களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும்,
குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்றகுறைபாடுகளை நிவர்த்தி செய்ய நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
ஒவ்வொரு தாலுகாவில் ஒரு கிராமத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் குந்தாரப்பள்ளி அடுத்த சாமந்தமலை கிராமத்தில்
நடந்த பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் குடிமை பொருள் வட்டவழங்கல் வட்டாட்சியர் ரமேஷ், வட்ட பொறியாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் கண்ணன்,
சத்தீஷ், ஊராட்சி செயலாளர் முருகன், விற்பனையாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அந்தப் பகுதியில் மக்களின் ரேஷன் கார்டில் புதியதாக உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் நீக்கம், தொலைபேசி எண், முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தனர்.