உள்ளூர் செய்திகள்

கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், நந்தி பெருமான், பரமத்திவேலூர் எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரநாதர், நந்தி பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-05-04 06:59 GMT   |   Update On 2023-05-04 06:59 GMT
  • சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
  • அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரமேஸ்வரர், நந்தி பெருமான், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் பரமத்திவேலூரில் 450 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு ஏகாம்பரநாதர், நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்திவேலூரில் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில்,

ஜேடர்பாளையம் சிவன் கோவில், பிலிக்கல்பாளை யம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி, பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் எழுந்தருளி யுள்ள சிவபெருமானுக்கும், நந்தி பெருமானுக்கும் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராத னைகளும், சிறப்பு அலங் காரமும் நடைபெற்றது.

பூஜையில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News