உள்ளூர் செய்திகள்

நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் ஜான்பாண்டியன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை தேவை ஜான்பாண்டியன் பேட்டி

Published On 2022-07-15 05:43 GMT   |   Update On 2022-07-15 05:43 GMT
  • நிலக்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் அக்கட்சியின் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டார்.
  • வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேசினார்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் அக்கட்சியின் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது எங்கள் கட்சிக்கு சீட் கொடுக்க விடாமல் தடுத்த ஓ.பி.எஸ். நிலை தற்போது பரிதாபமாக உள்ளது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தேவேந்திரகுல வேளாளர் சங்கம் சேர்ந்து தான், 7 உட் பிரிவுகளை உள்ளடக்கி, தேவேந்திரகுல வேளாளர் என அரசு ஆணையை பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின்பேரில் சான்று வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு நாங்கள் எல்லோரும் விசுவாசமாக இருப்போம். தமிழக அரசியல் செயல்பாடுகள் இப்போது சுமாராக தான் உள்ளது. யாருக்கும் தொந்தரவு கிடையாது. அதே சமயம் நன்மையும் இல்லை, தீமையும் இல்லை. தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி மீண்டும் மக்களுக்கு பணியாற்ற வேண்டுகிறேன்.

தொழிலாளர்கள் முன்னேறுவதற்கு தொழி ற்சாலைகள் தேவைப்படு கிறது. அதனால், வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை இங்கிருந்து விற்கப்பட்டால், ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.

அந்த நிறுவனம் விற்க ப்படகூடாது. மீண்டும் தொழி ற்சாலையை திற க்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் வேண்டுகோள். இப்பகுதியில் எங்களது கட்சி சார்பில் ஒட்டப்பட்டி ருந்த போஸ்டர்களை மர்மநபர்கள் கிழித்துள்ள னர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News