உள்ளூர் செய்திகள்

விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவியை காதலிப்பதில் மாணவர்கள் மோதல்

Published On 2022-10-29 07:01 GMT   |   Update On 2022-10-29 07:01 GMT
  • கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீயர் படிக்கும் மாணவி ஒருவரை, இருவரும் காதலித்து வந்தனர்.
  • நடுரோட்டில் உருட்டு கட்டை கொண்டு தாக்கி கொண்ட, வீடியோ வெளியானது.

கடலூர்:

விருத்தாசலம் அருகே மேலப்பாளையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் . அவரது மகன் வருண்குமார் இவரும், கீழப்பாளையூர் கிராமத்தை சேர்ந்த சுதாகரன் என்பவரும், பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீ யர் படிக்கும் மாணவி ஒருவரை, இருவரும் காதலித்து வந்தனர். . இவர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பதால், 2பேருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று கல்லூரி செல்வதற்காக சுதாகரனும், வருண்குமாரும், கல்லூரி பஸ்சுக்காக கருவேப்பி லங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கல்லூரி மாணவியியை காதலிப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சினையால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒரு கட்டத்தில், 2 மாணவர்களும் மற்றும் அவர்கள் சக கல்லூரி மாணவருடன் ஒன்றிணைந்து, ஒருவரு க்கொருவர் உருட்டு கட்டை கொண்டு கொடூரமாக தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்த 6 கல்லூரி மாணவ ர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காவல்துறையினர் இதுபோல் சம்பவத்தில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்து, வழக்கு எதுவும் பதியாமல் வீட்டுக்கு, அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவி காதலிப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சனையால், கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் உருட்டு கட்டை கொண்டு தாக்கி கொண்ட, வீடியோ வெளியாகி விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News