உள்ளூர் செய்திகள்

ஆரணி அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா திருக்கோவிலில் காப்புக் கட்டி விரதம்

Published On 2023-06-04 11:03 GMT   |   Update On 2023-06-04 11:03 GMT
  • அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா சுவாமி கொலுவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • மூன்று நாட்கள் ஜங்காலபள்ளி நாகபுஷணம் தேவாரா அவர்களின் காமம்மா சரித்திர காலாட்சேபம் நடைபெற்றது.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி, பெஸ்த வீதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் காப்பு கட்டி விரதம் இருந்த 350 பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை காலை கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை மாலை அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா சுவாமி கொலுவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அன்று முதல் மூன்று நாட்கள் ஜங்காலபள்ளி நாகபுஷணம் தேவாரா அவர்களின் காமம்மா சரித்திர காலாட்சேபம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை பக்தர்கள் கோவிலுக்கு சாரி வரிசை கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சனிக்கிழமை விடியற்காலை காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து கோவில் எதிரே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா பக்தர்களும்,பொது மக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News