உள்ளூர் செய்திகள் (District)

ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு கூட்டம்: தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்

Published On 2023-02-16 10:19 GMT   |   Update On 2023-02-16 10:19 GMT
  • மாவட்ட கலெக்டரின் எந்தவித அனுமதியும் பெறாமல் தீர்மானம் கொண்டு வந்ததற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • மொத்தம் உள்ள 16 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

திருத்தணி:

ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. அப்போது ஒன்றிய குழு தலைவர் பயன்படுத்தி வந்த அரசு ஜீப் பழுதானதால், அவர் கடந்த இரண்டு மாதங்களாக பயன்படுத்திய வாடகை காருக்கு ரூ.71 ஆயிரம் பொது நிதியில் இருந்து வழங்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மாவட்ட கலெக்டரின் எந்தவித அனுமதியும் பெறாமல் தீர்மானம் கொண்டு வந்ததற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் தி.மு.க,-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மொத்தம் உள்ள 16 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. தி.மு.க. ஒன்றிய தலைவருக்கு எதிராக அ.தி.மு.க கவுன்சிலர்களுடன் சேர்ந்து திமுக கவுன்சிலர்களும் செயல்பட்டதால் ஒன்றிய குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News