உள்ளூர் செய்திகள் (District)
காட்டாங்கொளத்தூர் அருகே லாரி மீது கார் மோதல்- டிரைவர் பலி
- காட்டாங்கொளத்தூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது திடீரென கார் மோதியது.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி இன்று அதிகாலை கார் வந்து கொண்டு இருந்தது. காரை வெங்கம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் தினேஷ்(24) ஓட்டினார். காரில் தனியார் கல்லூரியில் படித்து வரும் 2 மாணவிகள், 2 மாணவர்கள் பயணம் செய்தனர்.
காட்டாங்கொளத்தூர் அருகே வந்த போது முன்னால் சென்ற லாரி மீது திடீரென கார் மோதியது. இதில் டிரைவர் தினேஷ் பரிதாபமாக இறந்தார். மாணவ-மாணவிகள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.