உள்ளூர் செய்திகள் (District)

குமுளி அருகே வீட்டில் சாராய ஊறல் பதுக்கியவர் கைது

Published On 2023-05-20 04:25 GMT   |   Update On 2023-05-20 04:25 GMT
  • பாபாஜி காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது.
  • நாகராஜை கைது செய்து கள்ளச்சாராய விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கூடலூர்:

தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே வெள்ளாரம் குன்று பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக வண்டிப்பெரியாறு, கலால்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் அனீஸ் தலைமையில் போதை தடுப்பு அலுவலர்கள் பென்னிஜோசப், ராஜ்குமார், கலால் அலுவலர்கள் அனீஸ், சசிகலா, சிபின் ஆகியோர் அடங்கிய குழுவினர் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பாபாஜி காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சமையல் அறையில் இருந்து 2 பிளாஸ்டிக் குடங்களில் வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் சாராய ஊறல், ஒரு லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கான உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் நாகராஜை கைது செய்து கள்ளச்சாராய விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News