உள்ளூர் செய்திகள் (District)

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களை தருமபுரம் ஆதீனம் பாராட்டினார்.

போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களை தருமபுரம் ஆதீனம் பாராட்டு

Published On 2022-11-16 09:44 GMT   |   Update On 2022-11-16 09:44 GMT
  • பள்ளி மாணவர்கள் 6 போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம்.
  • தருமபுரம் ஆதீனம் மாணவர்களை பாராட்டி அருளாசி வழங்கினார்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவர்களுக்கிடையே போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் குருஞான சம்பந்த மிஷன் மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 6 போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்களை பள்ளியின் புரவலர் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசீக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆட்சி மன்ற குழுவின் தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாதன் தம்பிரான் சுவாமிகள், துணைத் தலைவர் முருகேசன், நிர்வாக செயலர் பாஸ்கர், செயலாளர் பாஸ்கர், முதல்வர் சரவணன், போட்டிக்கு தயார் செய்த ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News