உள்ளூர் செய்திகள் (District)
- வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.
- தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சுவாமிமலை:
கும்பகோணம் திருமஞ்சன வீதி கீழ சந்தில் வசித்து வருபவர் கணேசன் (வயது 59).
இவரது மனைவி சாவித்ரி.
கணேசன் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இன்று காலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.
பின்னர் சிறிது நேரத்தில் வீடு தீபிடித்து எரிந்தது.
உடனே அக்கம் பக்கத்தினர் இது குறித்து கும்பகோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசம் ஆனது.
இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.