உள்ளூர் செய்திகள் (District)
- சேலம் அன்னதானப்பட்டி பந்தல் காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி தவறி விழுந்து பாலியானர்.
- இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி பந்தல் காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து. இவரது மனைவி பாக்கியம் ( வயது 65). கடந்த மாதம் 29-ந் தேதி திங்கட்கிழமை இரவு வீட்டின் 3-வது மாடியில் இருந்து இறங்கி கீழே வந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி மாடிப்படியில் இருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் தலை பின் பக்கம் படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி பாக்கியம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.