- அதே பகுதியை சேர்ந்த 23 வயதுள்ள ஒரு இளம்பெண்ணை பல வருடமாக காதலித்து வந்துள்ளார்.
- வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றிய தமிழ்வாணனை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே கீழ கபிஸ்தலம் ஒத்தை தெருவில் வசித்து வருபவர் தமிழ்வாணன் (வயது 29). கார் டிரைவர்.
இவர் அதே பகுதியை சேர்ந்த 23 வயது உள்ள ஒரு இளம் பெண்ணை பல வருடமாக காதலித்து வந்துள்ளார்.
அவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
பின்னர் ஜாதியை காரணமாக காட்டி அந்த இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது குறித்து பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணி, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பகவதி சரணம், இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றிய தமிழ்வாணனை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
தமிழ்வாணனை பொறுப்பு மாஜிஸ்திரேட் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.