உள்ளூர் செய்திகள் (District)
நாட்டறம்பள்ளியில் வெளுத்து வாங்கியகனமழை
- மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது
- விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி
ஜோலார்பேட்டை:-
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.
மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இரவில் கரு மேகங்கள் சூழ திடீரென மழை பெய்யத் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
அதேபோல் ராமகிருஷ்ணாபுரம், மல்லகுண்டா, வேட்டப்பட்டு, பச்சூர், புதுப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாட்டறம்பள்ளி பகுதியில் அதிகபட்சமாக 21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் திருப்பத்தூரில் 3.20 சென்டிமீட்டர், ஆலங்காயத்தில் 2 சென்டிமீட்டர் மழை பதிவானது.