உள்ளூர் செய்திகள்

மது விற்ற வியாபாரி கைது

Published On 2022-09-29 09:30 GMT   |   Update On 2022-09-29 09:30 GMT
  • 150 சாராய பாக்கெட்கள் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளியில் கர்நாடக மாநில மது பாக்கெட்களை கள்ளத்தனமாக விற்பனை செய்த பழ வியாபாரி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர் அப்போது பையனப்பள்ளி பகுதியில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக நாட்டறம்பள்ளி போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அந்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது பையனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சாமு இவரது மகன் கமல் (வயது 38 ) என்பவர் அதே பகுதியில் பழம் வியாபாரம் செய்து வருகிறார் இவர் தனது வீட்டின் பின்புறம் கர்நாடக மாநில 150 மது பாக்கெட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இவரிடமிருந்து கர்நாடக மாநில 150 மது பாக்கெட்கள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News