உள்ளூர் செய்திகள்

 விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட முருங்கைக்காய்களை படத்தில் காணலாம்.

வெள்ளகோவில் சந்தைக்கு 15 டன் முருங்கைக்காய் வரத்து.

Published On 2022-07-11 04:53 GMT   |   Update On 2022-07-11 05:22 GMT
  • வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
  • ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 7 க்கும், மரம் முருங்கை ரூ.6 க்கும், கரும்புமுருங்கை ரூ.10 க்கும் கொள்முதல் செய்தனர்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது, இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,

நேற்று 75 விவசாயிகள் 15 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 7 க்கும், மரம் முருங்கை ரூ.6 க்கும், கரும்புமுருங்கை ரூ.10 க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர் ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக வெள்ளகோவிலைச் சேர்ந்த முருங்கைக்காய் வியாபாரி எம்.பி.முருகேசன் கூறினார்.

Tags:    

Similar News