உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2022-09-30 08:08 GMT   |   Update On 2022-09-30 08:08 GMT
  • காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசுக்கு தகவல்.
  • போலீஸார் சூதாடி கொண்டிருந்தவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளகோவில் :

முத்தூர் அருகே உள்ள சின்னமுத்தூர் பொதுக் கழிப்பிடம் அருகே நேற்று காலை காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது காசு வைத்து சூதாடி கொண்டிருந்த முத்தூர் அருகே உள்ள மோளக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த சென்னியப்பன்(வயது 65). சண்முகம்(50), சந்திரன் (46), ராஜேஷ் (42), ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News