உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வெள்ளகோவிலில் பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா

Published On 2022-12-01 06:46 GMT   |   Update On 2022-12-01 06:46 GMT
  • வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழாபோட்டியில் பங்கேற்க உள்ளனர்.
  • பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளில் தமிழக கல்வித்துறை உத்தரவின் பேரில் கடந்த வாரம் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழாவில் கலந்து கொண்டனர்.

கலைத்திருவிழாவை தாராபுரம் கல்வி மாவட்ட அலுவலர் (உயர்நிலை) பக்தவச்சலம் துவக்கி வைத்தார். இந்த கலைத்திருவிழாவில் மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி, பாட்டு, கட்டுரை, ஓவியம், தனி நடனம், குழு நடனம், களிமண் வேலைப்பாடுகள் ஆகியவற்றை மாணவ மாணவிகள் செய்து காண்பித்தனர். இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழாபோட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இந்த கலைத்திருவிழாவானது வட்டார அளவில் 29 ந்தேதி 9, 10 ம்வகுப்பு மாணவ மாணவிகளுக்கும், 30 ந்தேதி 6, 7,8 மாணவ மாணவிகளுக்கும் இன்று 1 ந்தேதி 11, 12 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் நடைபெற்றன. இந்த போட்டிகளில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். இந்த கலைத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வெள்ளகோவில் வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மீனாட்சி, வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அரங்கசாமி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News