உள்ளூர் செய்திகள் (District)

சென்றாய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள் பாலித்த காட்சி.

பல்லடம் அருகே சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-08-23 11:26 GMT   |   Update On 2022-08-23 11:26 GMT
  • யாக வேள்வி நடத்தி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
  • பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பல்லடம் :

பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையத்தில் சென்றாய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆனந்தபுரி ஆதினம் பழனிசாமி அடிகளார் தலைமையில், வாலை பரமேஸ்வரி சித்தர் பீடம் சிவசாமி சிவம் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் சதீஸ்சிவம், சதீஸ்குமார்சிவம் ஆகியோர் யாக வேள்வி நடத்தி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கோடங்கிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் காவி.பழனிசாமி தொடங்கி வைத்தார்.கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சென்றாய பெருமாளை வழிபட்டனர்.

Tags:    

Similar News