உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம். 

வெள்ளகோவிலில் மோட்டர் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

Published On 2022-10-08 07:55 GMT   |   Update On 2022-10-08 07:55 GMT
  • மூலனூரில் உள்ள செல்வராஜ் என்பவர் தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்
  • அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள நடேசன் நகர் பகுதியில் வசித்து வருபவர் கனகராஜ் (51) மூலனூரில் உள்ள செல்வராஜ் என்பவர் தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று காலை வெள்ளகோவிலில் இருந்து மூலனூர் நோக்கி கரப்பாலம் என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது தானே நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கனகராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் இறந்தார்.இந்த விபத்துக்கு குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News